தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி எப்போ?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவித்தொகை பெற செப்டம்பர் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ மேகநாத ரெட்டி ஐஏஎஸ் தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் செயற்படுத்தப்பட்டு வரும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் மற்றும் வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
இதற்கென மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்களில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் ஆகஸ்ட் 8 காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆகும்.
இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனையர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 08.08.2025 முதல் 08.09.2025 மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலமாக
விளையாட்டு வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் மற்றும் வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் தற்போது பயனாளிகளாக உள்ளவர்கள் தங்கள் தற்போதைய திட்டத்தை தொடர மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
மேலே குறிப்பிட்ட திட்டங்களில் பயனடைந்து வரும் விளையாட்டு வீரர் / வீராங்கனையர்கள் வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் / தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், அல்லது பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டத்திலிருந்து, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் தகுதி நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் புதியதாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
2 ஆண்டுகளில் பெற்ற விளையாட்டு சாதனைகள்
இந்தத் திட்டங்களில் பயன்பெற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனையர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் பெற்ற விளையாட்டு சாதனைகள் தகுதியானதாக கருதப்படும்.
வயது பிரிவு அடிப்படையில் பங்கேற்றிடும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்றிருக்கும் பட்சத்தில், அதற்கான சான்றிதழ் உடன் படிவம் -2 இணைத்து சமர்ப்பித்தால் மட்டுமே தகுதியாக கருதப்படும். மேலும் சர்வதேச அளவிலான சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்கள் தகுதிச் சான்றிதழ் உடன் படிவம் -1 இணைத்து சமர்பித்தால் மட்டுமே தகுதியாக கருதப்படும். வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் கடந்த 2 வருட காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்றிருத்தல் வேண்டும்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம் மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் கடந்த 4 வருட காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் நேரத்தில் கடந்த 3 மாதங்களில் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் நேரத்தில் மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
சுழற்சி முறையில் நடத்தப்படும் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் உலக கோப்பை சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஸ் போட்டி, ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய அளவிலான போட்டிகள் அடங்கும். விண்ணப்பித்திடுவதற்கான வயது வரம்பு வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அறிவிப்பு தேதியின் படி 20 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
இணைய வழிமூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் அவர்களால் அமைக்கப்பட்ட ஆய்வு குழு மூலம் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையிலான தேர்வு குழுவின் இறுதி ஒப்புதலுக்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் விதிமுறைகளின் அடிப்படையில் இத்திட்டத்தில் இணைக்கப்படுவர்.
இந்த ஆணையத்தின் விதிகள் மற்றும் 2 ஆண்டுகள் வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகபட்சம் இத்திட்டத்திற்கான உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 என்ற தொலைபேசி எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications