இலங்கையில் சிங்களர்கள் நடத்திய வெறியாட்டத்தில் 3 முஸ்லிம்கள் கொலை

இலங்கை அரசில் தமிழர்கள் பங்கேற்பதை பெரும்பான்மையான சிங்களர்கள் வெறுத்தனர். இதனால் தமிழருக்கு எதிரான இனவிரோத போக்கை சிங்களர்கள் கட்டவிழ்த்தனர். இதைத்தொடர்ந்து தனி ஈழம் கேட்டு விடுதலை புலிகள், ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆயுத போராட்டம் கடந்த சில வருடங்களாக முடிவிற்கு வந்துள்ள நிலையில், சிங்களர்கள் கவனம் தற்போது இஸ்லாமியர்கள் மீது திரும்பியுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காடாக உள்ள முஸ்லிம்கள், இலங்கை அரசியலில் அதிகம் பங்கெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பவுத்த பிட்சுக்கள் பகிரங்கமாக பேசிவருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில் நேற்று மாலை பவுத்த பிட்சுக்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டுள்ளனர். இதை முஸ்லிம்கள் தட்டி கேட்டபோது, இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது.
தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அளுத்கம மற்றும் பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் இருதரப்புக்கும் நடுவே நேற்றிவு முதல் இன்று பகல் வரை மோதல் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்களின் கடைகள், வணிக நிறுவனங்கள், பவுத்த கடும்போக்குவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டன. சில பகுதிகளில் மசூதிகள் தாக்கப்பட்டதுடன், தொழுகை நடத்தியவர்களும் ரத்தம் வரும்வரை அடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பஸ்சில் பயணம் செய்த முஸ்லிம்களை கூட பவுத்த கடும்போக்குவாதிகள் விட்டுவைக்கவில்லை. பஸ்களை நிறுத்தி அவர்களை கீழே இழுத்து அடித்துள்ளனர். போலீசார் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆயினும், நிலைமை கைமீறி போனதால் அலுத்கமா, பெருவலா பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான விருதை வாங்க பொலிவியா சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, "சட்டம் தனது கடமையை செய்யும். யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது" என்று அங்கிருந்தபடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே இஸ்லாமியரான, சட்டத்துறை அமைச்சர் ஹக்கீம் , "பவுத்தர்கள் தாக்குதல் நடத்தியதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த அரசில் அங்கம் வகிக்க நான் அவமானப்படுகிறேன்" என்று தெரிவித்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications