பிரபாகரனுக்கு பயந்து கொழும்பில் 'பாதாள சொகுசு மாளிகை" அமைத்தேன்... மகிந்த ராஜபக்சே

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விமான தாக்குதல்களுக்கு அஞ்சி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சொகுசு பதுங்கு குழி அமைத்ததாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ரகசியமாக ஒரு பதுங்கு குழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பதுங்கு குழியும் கூட ஒரு சொகுசு மாளிகையாகத்தான் இருந்ததும் அம்பலமானது.

Bunker at President's House built for security reasons, says Rajapaksa

இந்த பாதாள சொகுசு மாளிகைக்குள் நுழைவதற்கு ரகசிய கோட்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியே வருவதற்கும் இதேபோல் கோட்வேர்டு இருக்கிறதாம். பதுங்கு குழி என்று சொல்லப்பட்டாலும் கூட அது முழுவதும் சொகுசாக வாழ்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மகிந்த ராஜபக்சே, இலங்கை ராணுவ தாக்குதல்களில் இருந்து தப்பிக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கி குழி அமைத்திருந்தார்.

Bunker at President's House built for security reasons, says Rajapaksa

அதேபோல் விடுதலைப் புலிகள் விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தியதால்தான் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழி அமைக்கப்பட்டது. ஒருவேளை ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டால் அந்த பதுங்கு குழியில் இருந்து ஜனாதிபதி மாளிகை செயல்படும் என்பதற்காகத்தான் கட்டப்பட்டது. இதில் ஒரு தவறுமே இல்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+