இலங்கை ஆளும் கூட்டணியில் இணைந்தார் சரத்பொன்சேகா... விரைவில் அமைச்சராகிறார்
கொழும்பு: இலங்கையின் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டு அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவ தளபதியாக இருந்தவர் சரத்பொன்சேகா. 2009-ம் ஆம் ஆண்டு இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்தது.
இதன் பின்னர் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுடன் சரத்பொன்சேகாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பொன்சேகா, மகிந்த ராஜபக்சேவின் பரம எதிரியானார். ஜனநாயக கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியையும் தொடங்கினார்.
அங்கு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் ரணில்- மைத்ரிபால அணியை தீவிரமாக ஆதரித்தார். ரணில்- மைத்ரி கூட்டணி வென்று ஆட்சி அமைத்த போதும் அமைச்சரவையில் சரத்பொன்சேகா சேர்க்கப்படவில்லை.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது காரணமாக கூறப்பட்டது. சரத்பொன்சேகா மீது போர்க்குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவரை அமைச்சராக்கக் கூடாது என்பது இந்நாடுகளின் நிலைப்பாடு.

இந்நிலையில் அமெரிக்கா- இலங்கை இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ள நிலையில் ரணில்- மைத்ரி கூட்டணியில் நேற்று பொன்சேகா மீண்டும் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நியமன எம்.பியாக்கப்பட்டு அடுத்த வாரம் அமைச்சராக பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications