விடுதலைப் புலிகள் தங்கத்தை புதைத்து வைத்தனரா?... தோண்டிப் பார்த்த இலங்கை ஏமாற்றம்!
கொழும்பு: இலங்கையில் விடுதலைப்புலிகள் தங்கம், ஆயுதங்களை புதைத்து வைத்திருப்பதாக எண்ணி தோண்டிப்பார்த்த ராணுவத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தனித்தமிழ் ஈழம் கோரி கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்து வந்த உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தாலும் இலங்கை ராணுவம் பிடித்து சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் நிலை என்ன என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.
எனினும் அதிபர் ராஜபக்ஷே அரசு தோல்வியடைந்து மைத்ரி பால சிரிசேனா அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் போரின் போது இடம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மீள்குடியேற்றம் செய்யப்படும் தமிழர்கள்
இந்திய அரசின் உதவியுடன் தமிழர்களை மீள்குடியேற்றும் பணிகளும், அவர்களின் நிலங்களை ஈழத்தமிழர்களிடமே ஒப்படைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இருந்த போதும் விடுதலைப்புலிகள் வாழ்ந்த சில இடங்கள் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

விடுதலைப் புலிகள் தங்கம் புதைத்தனரா?
இந்நிலையில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது விடுதலைப்புலிகள் தங்கம் மற்றும் ஆயுதங்களை புதைத்து வைத்திருப்பதாக இலங்கை அரசு நம்பி வருகிறது. இதற்காக சட்டத்திற்கு உட்பட்டும், சட்டத்திற்கு புறம்பாகவும் பல்வேறு சோதனைகளை அரசு ராணுவ உதவியுடன் செய்து வருகிறது.

புதுக்குடியிருப்பில் நடந்த தேடுதல் வேட்டை
இதே போன்று வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஏராளமான தங்கத்தையும், நகைகளையும், ஆயுதங்களையும் ரகசியமாக புதைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து முல்லைத்தீவு மாஜிஸ்திரேட்டு அனுமதியுடன் அந்த இடத்தில் ராணுவத்தினர் சுமார் 3 மணி நேரம் கனரக எந்திரங்களை வைத்து சல்லடை போட்டு சளித்துள்ளனர்.

ஏமாற்றமே மிஞ்சியது
ஆனால் அந்தப் பகுதியில் தண்ணீர் தான் கிடைத்ததே தவிர தங்கமோ, ஆயுதங்களோ இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் நேற்றைய சோதனையை முடித்துள்ளனர். எனினும் இன்றும் அந்த இடத்தில் மீண்டும் தோண்டும் பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications