ஒரே இரவில் 3.000 சிங்கள வீரர்களை கொன்றேன்..கருணாவின் ஒப்புதல் வாக்குமூலம்- கிடுக்குப்பிடி விசாரணை
இலங்கை: தாம் கொரோனாவை விட கொடியவன் என்றும் ஒரே இரவில் 3,000 சிங்கள வீரர்களை கொலை செய்தவன் என்றும் கருணா பேசியிருப்பது இலங்கை அரசியலில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. கிழக்கு மாகாணமான அம்பாறையில் நடைபெற்ற பிரசாரத்தில் அண்மையில் கருணா பேசினர்.

3,000 பேரை கொன்றவன்
அப்போது, என்னை கொரோனாவை விட கொடியவன் என்கிறார்கள். ஆம் நான் கொரோனாவை விட கொடியவனே. கொரோனா இதுவரை 11 பேரை கொன்றிருக்கிறது. ஆனால் ஆனையிறவு போரில் ஒரே இரவில் 3,000 சிங்கள வீரர்களை கொலை செய்தவர்கள் நாங்கள் என்றார். கருணாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

விசாரணை கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியாக இருந்த காலத்தில் தாம் செய்த படுகொலைகளை கருணா பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று சிங்கள கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கருணா மீது விசாரணகளுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

விசாரணைக்கு அழைப்பு
இதனிடையே கருணாவை குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை தேர்தல் நேரத்தில் கருணாவை விசாரணைக்கு அழைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு பதில் தந்திருக்கும் கருணா, என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல என பதிலடி கொடுத்திருக்கிறார்.

என்னை கைது செய்ய முடியாது
இது தொடர்பாக கருணா கூறுகையில், என்னை கைது செய்ய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கூறுகிறார். அவரது தந்தை பிரேமதாசதான், விடுதலைப் புலிகளுக்கு 5,000 ரைபில்கள், 1 லட்சம் துப்பாக்கி தோட்டாக்களை கொடுத்தவர் என்பதை வசதியாக மறந்துவிடக் கூடாது. இன்னொருவர் அனுராகுமார திசநாயக்க. இலங்கையில் 80,000 பேரை படுகொலை செய்த ஜேவிபி அமைப்பின் தலைவர் அவர். இவர்கள் எல்லாம் என்னை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். அது நடக்காது என்றார் கருணா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications