தமிழர்களும், சிங்களர்களும் கணவன், மனைவி என்று கூறவில்லை -விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்: தமிழர்களும், சிங்களர்களும் கணவன் மனைவி போல என்று நான் கூறவில்லை. நான் பேசியது திரித்து வெளியாகியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபுசார்பில் வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசுகையில்,
அண்மையில் நான் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி ஒன்று வழங்கியிருந்தேன். அப்பேட்டியில் சில விஷயங்கள் கூறியிருந்தேன். ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரித்து வெளிவந்ததோடு, நான் கூறிய முக்கியமான சில விஷயங்களையும் குறிப்பிடப்படவில்லை. தமிழரும் சிங்களவரும் கணவன் மனைவி போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை என்றார் அவர்.
இதே பேட்டியின்போது கூட்டணியின் தலைவரான சம்பந்தன், நாங்கள் தனி நாடு கேட்கவில்லை, பிரிவினை கோரவில்லை, சுயாட்சியை மட்டுமே கேட்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.