திருகோணமலையில் 2 கட்டங்களாக இந்தியா- இலங்கைக் கடற்படைகளின் பிரமாண்ட கூட்டுப் பயிற்சி தொடங்கியது!!
திருகோணமலை: திருகோணமலையில் இந்தியா- இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
SLINEX என்ற பெயரில் 2005ஆம் ஆண்டு முதல் இந்தியா- இலங்கை இடையே ஆண்டு தோறும் கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்தியக் கடற்படையின் சாவித்ரி, கோரா, கிர்பன் ஆகிய போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்த கூட்டுப் பயிற்சி வரும் நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தற்போது, துறைமுகம் தொடர்பிலான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து 2-வது கட்ட கடற்பயிற்சிகள் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. இதில் கடற்கொள்ளை முறியடிப்பு, ஹெலிகாப்டர் நடவடிக்கைகள், தற்காப்பு உள்ளிட்டவை குறித்த பயிற்சிகள் நடைபெறும்.

முன்னதாக திருகோணமலை துறைமுகத்துக்கு சென்ற இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்களின் அதிகாரிகளை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.












Click it and Unblock the Notifications