மகிந்த ராஜபக்சே மகன் பயன்படுத்திய ஹெலிகாப்டர் எங்கே? தீவிர தேடுதல் நடவடிக்கை!!
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டர் எங்கே என அந்நாட்டு போலீஸ் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்ற நிலையில் அவரது குடும்பத்தினர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ராஜபக்சேவின் மகன்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டுகளை சிங்கள அமைப்புகள் முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் ராஜபக்சேவின் மகன் யோஷித பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரைத் தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்துக்குச் சொந்தமான சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் இந்த ஹெலிகாப்டர் மற்றும் செயற்கைக்கோள் பேருந்து வாங்கப்பட்டதாகவும் இவை நாரகேன்பிட்டியா என்ற இடத்தில் மறைத்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளனவாம்.
மேலும் ராஜபக்சே குடும்பத்தினர் அவரது ஆட்சிக் காலத்தில் வாங்கிக் குவித்த சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications