இலங்கையில் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்… மியான்மருக்கு நாடு கடத்தப்படும் அபாயம்
இலங்கையில் கைது செய்யப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த அகதிகள் மீண்டும் மியான்மருக்கே நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு: அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்ததாக இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 30 ரோஹிங்கியா அகதிகள் மியான்மருக்கு நாடு கடத்தப்படக்vகூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், இந்த அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் மற்றும் வழக்கறிஞர் சிராஜ் நூர்டின் உள்ளிட்ட மூவர் கொண்ட குழு கொழும்பிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்த இவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு
இதனைத் தொடர்ந்து மே 2ஆம் தேதி தஞ்சாவூர் அதிராம்பட்டினம் கடலோர காவல் படையினரால் நான்கு இந்தியர்கள் உட்பட 30 மியான்மர் ரோஹிங்கியா அகதிகள் மீதும் வெளிநாட்டினர் மற்றும் பாஸ்போர்ட் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது.
மியான்மர் அகதிகள்
மியான்மரைச் சேர்ந்த இந்த 30 ரோஹிங்கியா அகதிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் அகதிகளாக பதிவுச் செய்யப்பட்டவர்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் அதிராம்பட்டினத்தில் தங்கியுள்ளார்கள்.
அகதி வாழ்க்கை
மியான்மரில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இந்தியா, பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் புக முயற்சித்து வருகின்றனர். நிலையான வாழ்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் ஆஸ்திரேலியா பயணத்தை தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
வெளியேற்றும் முயற்சி
கடல் வழியாக வரக்கூடிய அகதிகளை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பி வருவதுடன் தனது தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகளையும் பல்வேறு வழிகள் மூலம் வெளியேற்ற முயற்சி வருகிது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications