சீனாவுடனான நட்புறக் கொள்கையை தொடர்வோம்: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உறுதி
கொழும்பு: சீனாவுடனான நட்புறவை இலங்கை தொடரும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே சீனா ஆதரவாளராக இருந்தார். இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராஜபக்சேவை ஆட்சியில் அகற்ற விரும்பின.

இதனால் தங்களுக்கு ஆதரவான மைத்ரிபால சிறிசேனவை அதிபர் தேர்தலில் நிறுத்தி வெல்ல வைத்தன. அதிபர் தேர்தலில் வென்ற மைத்ரிபால சிறிசேனவும் சீனா உதவியுடனான திட்டங்களை நிறுத்தி வைத்தார்.
மேலும் அமெரிக்கா, இந்தியாவுடன் நல்லுறவுக்கான கதவுகளை திறந்துவிட்டார். இதனாலேயே இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்கள் கைவிடப்பட்டு தற்போது இலங்கைக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.
இருப்பினும் இந்த தீர்மானத்துக்கு சீனாவும் ஆதரவளித்தது. இதனை பயன்படுத்தி மீண்டும் இலங்கையை தமது வலையில் சிக்க வைக்க சீனா களத்தில் இறங்கியுள்ளது.
இதற்காக இலங்கைக்கான சிறப்பு தூதராக சீனாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் லிஜியூ சென்மின் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் உயர்நிலைக் குழு உடனடியாக இலங்கை வருகை தந்துள்ளது.
இக்குழுவினர் கொழும்பில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து பேசினர். அப்போது சீனா தரப்பில், தென்னாசியாவின் முக்கிய நாடாக இலங்கையை மதிக்கிறோம்; இலங்கையின் வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று லிஜியூ சென்மின் உறுதியளித்தார்.
மேலும் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட சிறிசேன, சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 2வது கட்ட கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன் சீனாவுடனான நட்புறவை இலங்கை தொடரும்; ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications