இலங்கையின் நிலம், வான், கடல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது-அனுர குமார திசநாயக்க
கொழும்பு: இலங்கையின் நிலம், வான், கடல் ஆகியவை இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என இந்தியாவுக்கு ஏற்கனவே தாம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்மை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தாம் இதனை தெரிவித்திருக்கிறேன் என்கிறார் அனுர குமார திசநாயக்க.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகிறார் இடதுசாரி, சிங்கள பேரினவாதி அனுர குமார திசநாயக்க. இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தினக்குரல் நாளிதழுக்கு அனுர குமார திசநாயக்க அளித்த பேட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தினக்குரல் நாளிதழுக்கு அனுர குமார திசநாயக்க அளித்த பேட்டியில் இந்தியா தொடர்பாக தெரிவித்திருப்பதாவது: எந்த நாடும் எந்த அரசியல் தேவையுடன் காய்களை நகர்த்தினாலும் எமது நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அதனால் மக்களின் மனங்களிலுள்ள அவர்களின் தேவைகளை எவராலும் மாற்றியமைக்க முடியும் என நாங்கள் நம்பமாட்டோம். இந்த புதிய நிலை மாற்றம் மக்களுக்கே தேவைப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் அரசியல் கட்சிகளின், கட்சித் தலைவர்களின் கடமைகள் என்ற எல்லாவற்றையும் விஞ்சி சென்று பொதுத்தேவையாக மாறியிருக்கிறது.
இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்நாட்டின் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். எங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு முன்னரும் நான் அவரை இந்தியாவிலேயே சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். நாங்கள் அவருக்கு மிகவும் முக்கியமான உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறோம்.
இலங்கையின் நிலம், வான் மற்றும் கடல் என்பவற்றை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் நாங்கள் பாவிக்க மாட்டோம் என்கின்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறோம். அதனைத் தவிர்த்ததாக நாட்டில் தோன்றியுள்ள நிலைமை பற்றியும் இலங்கையின் எதிர்காலம் பற்றியுமே நாங்கள் உரையாடினோம். இவ்வாறு அனுர குமார திசநாயக்க அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications