வடமாகாண இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க இலங்கை அரசு சதி: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: வடமாகாண இளைஞர்களை போதை பழக்கத்துக்கு அடிமையாக்க முயற்சி செய்வதாக இலங்கை அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் அம்மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன்.
இலங்கையில், மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் தென்மேற்கு இளைஞர் கழக சம்மேளனததின் இரண்டாவது வருடாந்த இளையோர் மாநாடு நடைபெற்றது.

அதில், இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அம்மாநாட்டில் விக்னேஸ்வரன் பேசும்போது, ‘வடமாகாணத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணி அவர்களை திசைதிருப்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, வல்லாட்சி செய்வது வருத்தத்தையே உண்டு பண்ணும் என்பதை கண்கூடாக கண்டதாலேயே உலகத்தின் பல நாடுகள் ஜனநாயகத்தை கட்டிக்காத்து வருகிறது' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications