இனி நான் சொல்றதைதான் கேட்கணும்.. போலீசுக்கு உத்தரவிட்ட ரணில்.. இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம்
இலங்கையில் அரசு அதிகாரிகள், போலீஸ் எல்லோரும் இனி தான் சொல்லும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில் அரசு அதிகாரிகள், போலீஸ் எல்லோரும் இனி தான் சொல்லும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரணில் விக்ரமசிங்கே சார்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆட்சி கவிழ்ந்தது
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ராஜபக்சவிற்கு பெரும்பான்மை இல்லை என்று அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் ரணில் விக்ரமசிங்கே இன்னும் மீண்டும் முறைப்படி பிரதமராக பதவி ஏற்கவில்லை. அதேபோல் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை முறையாக துறக்கவில்லை, அவர் இன்னும் பிரதமர் அலுவலகத்தில்தான் உள்ளார். மேலும் சிறிசேனவும் இதுகுறித்து முறையாக எந்த அறிவிப்பும் வெளியிடாத காரணத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
|
தன்னை பின்பற்ற வேண்டும்
அங்கு யாருக்கு இப்போது பிரதமருக்கான அதிகாரம் உள்ளது என்று ரணில் விக்ரமசிங்கே டிவிட் செய்துள்ளார். அதில், கடந்த அக்டோபர் 26ம் தேதிக்கு முன்பு இருந்த அரசுதான் இனி தொடரும் என்பதை தெரிவிக்கிறேன். அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் போலீஸ்கள் இனி முன்னாள் அரசிடம் இருந்து எந்த விதமான உத்தரவுகளையும் முறையின்றி பெற கூடாது. அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டனர்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யார் சொல்வதை கேட்பது
இதனால் அங்கு யாருடைய பேச்சை கேட்பது என்று அதிகாரிகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். யார் பிரதமர், யார் சொல்லும் கட்டளைகளை பின்பற்றுவது என்று குழம்பி இருக்கிறார்கள். அதேபோல் இப்போது எந்த துறைக்கு யார் அமைச்சர் என்ற குழப்பமும் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications