வேன் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த விநாயகர் சிலை... 10 பேர் காயம்
சென்னை: சென்னையில் நடந்த விநாயகர் சிலை கரைப்பின்போது 5 அடி உயர விநாயகர் சிலையுடன் வந்த வேன் கவிழ்ந்ததில் பக்தர்கள் மீது விநாயகர் சிலை விழுந்து 10 பேர் காயமடைந்தனர்.
சென்னை வில்லிவாக்கம், ஆதிநாராயணர் தெருவில் 5 அடி விநாயகர் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று பகல் 1 மணி அளவில் அந்த சிலையை குட்டி யானை எப்படும் டாடா ஏஸ் வேனில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அந்த வேன், தீவுத்திடல் அருகே அண்ணா சாலை, முத்துசாமி பாலம் சந்திப்பில் வரும் போது திடீரென்று விபத்தில் சிக்கியது. இதில் வேன் கவிழ்ந்தது. அதில் இருந்த சிலையும் உடைந்து விழுந்தது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் வேனில் சிலையுடன் பயணித்த பிரவீன் குமார் (16), கோட்டா ராம் (26), அசோக் (27), மங்களாத்தார் (28), சந்தோஷ் (29), அமரா ராம் (33), ரங்கூன் (23), பீமா ராம் (35), சங்கர் (22) மற்றும் ஜோதி (3) ஆகிய 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications