அரியலூர்: அரசு பேருந்து - லாரி மோதி விபத்து: 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

அரியலூர் மாவட்டத்தின் செந்துறை - அரியலூர் சாலையில் ஓட்டக்கோவில் என்ற ஊரில் அரசு பேருந்தும் இரண்டு லாரிகளும் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் உடனடியாக விரைந்தது. போலீசாரும் உடனடியாக வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications