கொட்டித்தீர்க்கும் பருவமழை – பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 கண்காணிப்பு பொறியாளர்கள் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சென்னையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 15 பொறியாளகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் மழை நீரால் பொதுமக்களும், போக்குவரத்தும் பாதிக்கப்படாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க குடிநீர் வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏற்று குடிநீர் வாரியம் சென்னையில் உள்ள 15 பகுதிகளுக்கும் 15 கண்காணிப்பு பொறியாளர்களை உடனடியாக நியமித்து பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளது.
சென்னையில் பருவ மழையின் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப்பகுதிகளில் மழை தண்ணீரால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி 24 மணிநேரமும் செயல்படும் மையம் ஒன்று குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள 044-4567 4567 என்ற எண்ணில் மழைநீர் பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம். உடனடியாக புகார் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை நீரை அப்புறப்படுத்துவதற்கான சிறப்பு டேங்கர் வாகனங்கள் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்களும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் அருகில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications