கொட்டித்தீர்க்கும் பருவமழை – பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 கண்காணிப்பு பொறியாளர்கள் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சென்னையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 15 பொறியாளகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் மழை நீரால் பொதுமக்களும், போக்குவரத்தும் பாதிக்கப்படாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க குடிநீர் வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏற்று குடிநீர் வாரியம் சென்னையில் உள்ள 15 பகுதிகளுக்கும் 15 கண்காணிப்பு பொறியாளர்களை உடனடியாக நியமித்து பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளது.
சென்னையில் பருவ மழையின் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப்பகுதிகளில் மழை தண்ணீரால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி 24 மணிநேரமும் செயல்படும் மையம் ஒன்று குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள 044-4567 4567 என்ற எண்ணில் மழைநீர் பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம். உடனடியாக புகார் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை நீரை அப்புறப்படுத்துவதற்கான சிறப்பு டேங்கர் வாகனங்கள் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்களும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் அருகில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications