ஸ்ரீரங்கத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் இரண்டு மாடி வீடு கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டுபோடு அருகில்
இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர் 7 பேர் படுகாயங்களுடன்
மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீரங்கம் மேல உத்தரவீதியில் 2 மாடி கட்டட கட்டுமான பணி நடந்துகொண்டிருந்தது. கட்டடத்திற்கு அஸ்திவாரம் தோண்டும் போடு அருகில் இருந்த வீட்டின் சுவர் மளமளவென சரிந்தது. இதில் தொழிலாளர்கள் அப்படியே மண்ணிற்குள் புதைந்தனர்.

உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கும் பணியில் ஈடுபட்டனர். மண்ணில் புதையண்ட தொழிலாளர்களில் 4 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 7 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications