போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த கூலித்தொழிலாளிகள் பலி.. கும்பகோணம் காவிரி கரையில் சடலம்
கும்பகோணம்: அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் உடன் போதை மாத்திரை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் காவிரி ஆற்றங்கரையில் சடலமாக இருந்த இருவரின் உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துரையில் இரண்டு பேர் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த பாலகுறு மற்றும் சவ்வுந்தரராஜ் என்பதும், அவர்கள் இருவரும் ஒன்றாக கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது. நேற்று இரவு இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதும் தெரிய வந்தது. மேலும் சடலத்திற்கு அருகே மதுபாட்டில்களும் சானிடைசர் பாட்டில்களும் கிடந்துள்ளன.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்தார்களா? அல்லது போலி மதுபானம் எதாவது குடித்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications