மதுரையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி!
மதுரை : மதுரையில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி வேலை செய்த போது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மதுரை-தேனி சாலையில் உள்ள ஹெச்.எம்.எஸ். காலனியில் கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சியில் கழிவுநீரை அகற்றுவதற்கு 2 மோட்டார் பைபர்கள் உள்ளன. இவை பழுதடைந்துள்ளதால், கழிவுநீரை அகற்றுவதற்கு தற்காலிக ஒப்பந்த பணியாளர்களான மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முனியாண்டி மற்றும் சென்னையைச் சேர்ந்த விசு ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்கு தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அவர்களை விஷவாயு தாக்கியதில், மூச்சு திணறி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் கதிரவன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்குவதாகவும், நாளைக்குள் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும்,விரிவான விசாரணை நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார். விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலியான சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications