திருப்பூர்: 2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை- முதியவர் கைது
திருப்பூர்: 2 வயது பெண் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். வாடகை கார் ஓட்டி வரும் இவர், தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிவானந்தன் என்பவரின் 2 வயது குழந்தையை கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி நேற்று கூட்டிச் சென்றுள்ளார்.

வீடு திரும்பிய குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து சிவானந்தன் அளித்த புகாரின் பேரில் முருகேசனை கைது செய்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications