தொடரும் மழை... 2வது நாளாக தமிழகத்தில் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்றும், தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், நேற்று தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சை, நெல்லை, திண்டுக்கல், கடலூர், நீலகிரி, கோத்தகிரி, குன்னூர், விழுப்புரம், நாகப்பட்டிணம் மற்றும் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லை, திண்டுக்கல், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications