துரைமுருகன், பொன்முடி, நேரு, பெரியசாமி உள்பட சிட்டிங் எம்எல்ஏக்கள் 23 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
சென்னை: திமுக வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்பட சிட்டிங் சட்டசபை உறுப்பினர்கள் 23 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்டார். இதில் பல முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும், அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுகிறார். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
துரைமுருகன் - காட்பாடி
பொன்முடி - திருக்கோவிலூர்
கே.என்.நேரு - திருச்சி மேற்கு
ஐ.பெரியசாமி - ஆத்தூர்
ஏ.ம. வேலு - திருவண்ணாமலை
கே.கே.எஸ்.எஸ்.ஆர,ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - குறிஞ்சிப்பாடி
கே.ஆர்.பெரியகருப்பன் - திருப்பத்தூர்
கு.பிச்சாண்டி - கீழ்பென்னாத்தூர்
கீதா ஜீவன் - தூத்துக்குடி
பூங்கோதை - ஆலங்குளம், உள்பட பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு, உள்ளிட்ட 21 தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குன்னூர் தொகுதியின் தற்போதைய உறுப்பினர் பா.மு.முபாரக், பத்மநாபபுரம் உறுப்பினர் புஷ்ப லீலா ஆல்பன் ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை.
பெரும்பாலானோருக்கு தாங்கள் போட்டியிட்ட வென்ற அதே தொகுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குன்னம் தொகுதியின் தற்போதைய உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு அரியலூர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேப்பனஹள்ளி உறுப்பினராக இருக்கும் டி.செங்குட்டுவனுக்கு கிருஷ்ணகிரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications