இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட 250 தமிழக மீனவர்களும் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 250 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் நேற்று முன் தினம் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 6 இலங்கை கடற்படை கப்பல்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து சிறைபிடித்தது.

250 TN fishermen arrested by SL Navy

கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீனவர்களுடன் 35 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

ஒரே நாளில் 250 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதால் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக நாகப்பட்டினத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+