எதற்கும் தயார்.. மன்னார்குடியிலிருந்து 250 "அடியாட்கள்" சென்னை வருகை!
மன்னார்குடியிலிருந்து 250 அடியாட்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மன்னார்குடியிலிருந்து 250 இளைஞர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எதற்கும் தயாரான நிலையில் உள்ளவர்கள் இவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த இளைஞர்களை சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் பிரித்துத் தங்க வைத்துள்ளனராம். எந்த நிலை வந்தாலும் சமாளிக்கத் தயாராக இருங்கள் என்று கூறி இவர்களைக் கூட்டி வந்துள்ளனராம். இவர்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு தரப்பட்டு கவனித்துக் கொள்கின்றனராம்.

இவர்கள் தவிர முக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டோரும் சென்னை வந்து முகாமிட்டுள்ளனராம். நகர் முழுவதும் உள்ள பல்வேறு ஹோட்டல்கள், வீடுகளில் இவர்கள் தங்கியுள்ளனராம்.
இவர்கள் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் சிக்கல் வந்தால் உள்ளூர் ஆட்களை வைத்து சமாளிக்க முடியாது என்பதால்தான், உள்ளூர் ஆட்களை நம்பக் கூடாது என்பதற்காவே சொந்த ஊரிலிருந்து இவர்களை கூட்டி வந்து இங்கு சாப்பாடு போட்டு வைத்திருப்பதாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications