29% மழை மிஸ் ஆகிப் போச்சே... கவலையில் தமிழகம்
சென்னை: தமிழகத்தில், நடப்பு வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில், 29 சதவீத அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக பெய்திருக்க வேண்டிய மழையில் 29 சதவீதம் அளவுக்கு குறைவான மழை பெய்துள்ளது.
குறிப்பாக சென்னைக்குக் கிடைத்திருக்க வேண்டிய அளவுக்கு இந்த முறை மழை பெய்யவில்லை. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இது நிலைதான்.
மோசம் என்ற நிலையில்தான் வட கிழக்குப் பருவ மழைக்காலம் தமிழகத்தில் தொடங்கியது. ஆனால் தற்போது பரவாயில்லை என்ற அளவுக்கு வந்துள்ளது. ஆனால் பற்றாக்குறை என்னவோ கவலை தருவதாகவே உள்ளது.

40 சதவீத பற்றாக்குறை
அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் மத்தி வரையிலான காலகட்டத்தில் வட கிழக்குப் பருவமழையின் பற்றாக்குறை 40 சதவீதமாக இருந்தது.

இப்போது 29 சதவீதம்
ஆனால் ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலகட்டத்தில் பற்றாக்குறை அளவு 29 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் மழை வந்தால் நல்லது
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஒய்.இ.ஏ. ராஜ் கூறுகையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்தம் புதிதாக வரும்போது கூடுதல் மழை கிடைக்கும்.

தர்மபுரி- கோவையில் நல்ல மழை
இதுவரை இந்த பருவ மழைக்காலத்தில், தர்மபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே இயல்பான மழை பெய்துள்ளது. நீலகிரியில் கூட மழை பொய்த்து வி்ட்டது.

சென்னையில் 50 சதவீதம் குறைவு
சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவாரூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 50 சதவீத அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

9 நாள் தாமதம்
வட கிழக்குப் பருவ மழை இந்த முறை 9 நாள் தாமதமாக வந்ததே இதற்குக் காரணம். சென்னைக்குப் போதிய மழை இந்த முறை கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications