கூடங்குளம் 2வது அணுஉலையில் விரைவில் மின்உற்பத்தி தொடங்கப்படும் - வளாக இயக்குநர் சுந்தர்
நெல்லை: கூடங்குளம் 2-ஆவது உலையில் அணு எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து மின்உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில், முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியானது பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் தொடர்ந்து வருகிறது. முதல் உலையில் இதுவரை 950.91 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் 2-ஆவது உலையில் அணு எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து மின்உற்பத்தியைத் தொடங்குவதற்கான கிரிட்டிகாலிட்டியை நிகழ்த்த வேண்டும். அதற்கு முன்பாக உலையின் வால்வுகளை பரிசோதனை செய்வதும், நீராவியை வெளியேற்றி அது செல்லும் பாதைகளைப் பரிசோதிப்பதும் அவசியமானது.
இரண்டாவது அணு உலையில் இப்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 2-ஆவது உலையில் இருந்து நீராவி வெளியேற்றப்படவுள்ளது. நீராவி வெளியேறும்போது சப்தம் எழுவது வாடிக்கை. இந்த சப்தமானது நீராவியின் அழுத்தத்துக்கேற்ப மெல்ல மெல்ல அதிகரிக்கக்கூடும்.
பகல் நேரத்தில் மட்டுமே இந்தச் சோதனை நடைபெறும். எனவே, சப்தம் கேட்டு பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம். சனிக்கிழமை காலை முதல் நீராவியை வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக 2-ஆவது உலையில் நடைபெறும் இத்தகைய சோதனைகளுக்கு கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்த அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆர்.எஸ். சுந்தர் மேலும் கூறுகையில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் தெரிவித்து, அணுப் பிளவுக்கான அனுமதியைப் பெறுவோம். அனுமதியைப் பெற்ற இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாத தொடக்கத்திலோ கிரிட்டிகாலிட்டி நடைபெறும். இதையடுத்து மின்உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications