கடல் மாசடைவதால் மனிதனுக்கு ஆபத்து: கடல்சார் ஆய்வாளர் எச்சரிக்கை !
மதுரை: கடல் மாசடைந்து வருவதால் நாளை மனிதன் அழியும் நிலை ஏற்படும் என மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கடல்சார் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக தொடர்பியல் துறை, புவி இதழியல் இணையம், இண்டர்நியூஸ் சார்பில் இளம் மற்றும் வளரும் மொழி-ஊடகவியலாளர்களுக்கான பருவநிலை மாற்றச் செய்தி தயாரிப்பு குறித்த 3 நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மொழியியல் மற்றும் தொடர்பியல் புலத் தலைவர்(பொ) சு.நாகரத்தினம் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் கடல்சார் பருவநிலை மாற்றம் குறித்து பேசிய கடல்சார் ஆய்வாளர் சிவ.பாலசுப்பிரமணி கூறியது: பல தீவுகள் ஏற்கனவே கடலுக்குள் மூழ்கிவிட்டன. தற்போதும் கூட நிறைய தீவுகள் மூழ்கி வருகின்றன. உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையை கொண்ட தமிழ்நாட்டில் 591 கடற்கரை கிராமங்கள் உள்ளன.
தற்போது கடல்வளம் மிகவும் மோசமடைந்து வருகிறது. கடல் வெப்பமயமாதலாலும், கழிவுகளை கொட்டும் இடமாக கடலை கருதுவதாலும் நிறைய கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றன.சோமாலியா நாட்டில் கொட்டப்படும் குப்பை கூட கடல் வழியாக தமிழகத்துக்கு வரும். அதேபோல தமிழ்நாட்டில் கொட்டப்படும் குப்பை கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்லும்.
கடல் நீர் மாசடைந்த காரணத்தால் சமீபத்தில் கூட 81 திமிகலங்கள் கடலில் இறந்து கரை ஒதுங்கின. உலகில் மனிதன் மட்டுமில்லை. பல உயிரினங்களும் வாழ்கின்றன. கடல் மாசடைவதால் நாளை மனிதனே அழியும் நிலை ஏற்படும் என்றார்.முன்னதாக வைகை நதி, கிருதுமால் நதிகளின் முக்கிய பகுதிகளில் கள ஆய்வு நடைபெற்றது.
கருத்தரங்கில் டெல்லி பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையின் மூத்த இணை ஆசிரியர் நிதின் சேத்தி, கொல்கத்தாவைச் சேர்ந்த மாண்ட் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் நிர்மால்யா முகர்ஜி, மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கீதாலட்சுமி, பெங்களூரைச் சேர்ந்த மரியன் டி.நாசரத், ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், டெல்லி ஆற்றல் மற்றும் வள நிறுவன பல்கலைக் கழக ஆய்வாளர் ராதிகா மிட்டல் உள்ளிட்டோர் பருவ நிலை மாற்றம் குறித்து விளக்கமளித்தனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications