கடல் மாசடைவதால் மனிதனுக்கு ஆபத்து: கடல்சார் ஆய்வாளர் எச்சரிக்கை !
மதுரை: கடல் மாசடைந்து வருவதால் நாளை மனிதன் அழியும் நிலை ஏற்படும் என மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கடல்சார் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக தொடர்பியல் துறை, புவி இதழியல் இணையம், இண்டர்நியூஸ் சார்பில் இளம் மற்றும் வளரும் மொழி-ஊடகவியலாளர்களுக்கான பருவநிலை மாற்றச் செய்தி தயாரிப்பு குறித்த 3 நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மொழியியல் மற்றும் தொடர்பியல் புலத் தலைவர்(பொ) சு.நாகரத்தினம் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் கடல்சார் பருவநிலை மாற்றம் குறித்து பேசிய கடல்சார் ஆய்வாளர் சிவ.பாலசுப்பிரமணி கூறியது: பல தீவுகள் ஏற்கனவே கடலுக்குள் மூழ்கிவிட்டன. தற்போதும் கூட நிறைய தீவுகள் மூழ்கி வருகின்றன. உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையை கொண்ட தமிழ்நாட்டில் 591 கடற்கரை கிராமங்கள் உள்ளன.
தற்போது கடல்வளம் மிகவும் மோசமடைந்து வருகிறது. கடல் வெப்பமயமாதலாலும், கழிவுகளை கொட்டும் இடமாக கடலை கருதுவதாலும் நிறைய கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றன.சோமாலியா நாட்டில் கொட்டப்படும் குப்பை கூட கடல் வழியாக தமிழகத்துக்கு வரும். அதேபோல தமிழ்நாட்டில் கொட்டப்படும் குப்பை கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்லும்.
கடல் நீர் மாசடைந்த காரணத்தால் சமீபத்தில் கூட 81 திமிகலங்கள் கடலில் இறந்து கரை ஒதுங்கின. உலகில் மனிதன் மட்டுமில்லை. பல உயிரினங்களும் வாழ்கின்றன. கடல் மாசடைவதால் நாளை மனிதனே அழியும் நிலை ஏற்படும் என்றார்.முன்னதாக வைகை நதி, கிருதுமால் நதிகளின் முக்கிய பகுதிகளில் கள ஆய்வு நடைபெற்றது.
கருத்தரங்கில் டெல்லி பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையின் மூத்த இணை ஆசிரியர் நிதின் சேத்தி, கொல்கத்தாவைச் சேர்ந்த மாண்ட் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் நிர்மால்யா முகர்ஜி, மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கீதாலட்சுமி, பெங்களூரைச் சேர்ந்த மரியன் டி.நாசரத், ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், டெல்லி ஆற்றல் மற்றும் வள நிறுவன பல்கலைக் கழக ஆய்வாளர் ராதிகா மிட்டல் உள்ளிட்டோர் பருவ நிலை மாற்றம் குறித்து விளக்கமளித்தனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications