சவூதி அரேபியாவில் வெளிநாட்டு கப்பல் மோதியதில் 3 தமிழக மீனவர்கள் பலி

சவூதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் படகு நொறுங்கியதுடன் நாகர்கோவில் மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: சவூதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் படகு நொறுங்கியதும் நாகர்கோவிலைச் சேர்ந்த 3 மீனவர்கள் பலியாகியுள்ளனர்.

நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தந்துரை மற்றும் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் சுகந்தன், நெவில். இவர்கள் மீனவர்களாவர். இவர்கள் 3 பேரும் சவூதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இவர்களது விசைப்படகு மீது மோதியது.

3 Fishermen of TN died in Saudi when a ship crashed fishermen's boat

இதில் படகு நொறுங்கியதுடன் 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்த மீனவர்களை மீட்டுத் தாருங்கள் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே படகு விபத்தில் ஒரு மீனவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் மற்ற 2 பேர் மாயமானதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் கேசவன்புத்தந்துரை மக்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசும், மத்திய அரசும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+