திருத்துறைப்பூண்டி அருகே பயங்கரம்: பைக் மீது அரசு பேருந்து மோதி 3 பேர் உயிரிழப்பு
பைக் மீது அரசுபேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குமார், ரமேஷ்குமார், அன்பரன் ஆகியோர் என்பதும் இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications