திருச்சியில் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
திருச்சியில் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

திருச்சி: திருச்சியில் உள்ள 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
மலைக்கோட்டை அருகே உள்ள குளத்தெருவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டடம் சினிமா விநியோகஸ்தர் கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

திருச்சியில் நேற்று கனமழை பெய்துள்ளதாலும், பக்கத்தில் இருந்த ஒரு வீடு இடிக்கப்பட்டதாலும் வலுவிழந்ததால் இந்த கட்டடம் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸாரும், மூன்று வாகனங்களில் வந்த 20 மீட்புப்படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டட இடிபாடுகளில் 5 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுவரை மீட்கப்பட்டுள்ளவர்களில் கார்த்திக் (45), ஹரீஷ் (6) ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். இருவரும் தந்தை- மகனாவர்.
இந்நிலையில் ராஜாத்தி, பழனி என்பவர்களும் இறந்துவிட்டனர். இந்நிலையில் ஒன்றரை வயது குழந்தை பரமேஸ்வரி உயிருடன் மீட்கப்பட்டார். எனினும் இவரது பெற்றோர் உயிரிழந்துவிட்டனர். இக்குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும் இந்த இடிபாடுகளுக்குள் உள்ளவர்களை உயிருடன் மீட்கும் பணியில் போலீஸார் மற்றும் மீட்புப்படையினருடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications