நகைக்காக 3 வயது சிறுமி கடத்திக் கொலை... பக்கத்துவீட்டுப் பெண் கைது
3 வயது சிறுமி நகைக்காக கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பக்கத்துவீட்டு பெண் ரேவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
எண்ணூர்: எண்ணூர் சுனாமிக் குடியிருப்பைச் சேர்ந்த 3 வயது சிறுமி ரித்திகா நகைக்காக கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவர் கை செய்யப்பட்டார்.
எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் முத்து என்பவரின் மகள் ரித்திகா. 3 வயதான ரித்திகா சனிக்கிழமை திடீரென்று காணாமல் போனார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை நேற்று குப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

எண்ணூரில் 3 வயது குழந்தை ரித்திகா கொலை வழக்கில் பக்கத்துவீட்டில் வசித்து வந்த ரேவதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரித்த போது, நகைக்காக குழந்தையை கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குழந்தை ரித்திகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ரேவதியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
3 வயது குழந்தை நகைக்காக கொலைச் செய்யப்பட்டதை அறிந்த எண்ணூர் பகுதி மக்கள் ஒன்று திரண்டு கொலை செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலின் போது போலீசாருக்கும் அப்பகுதி பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் எண்ணூர் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சிறுமி கொலை குறித்து தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications