ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 32 பேர் கைது.. அதிகாலையில் வீடு புகுந்து நடவடிக்கை
நாளை கோட்டை முற்றுகை நடைபெறும் ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
Recommended Video

ஈரோடு: ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 32 பேரை அதிகாலையில் வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு ஈடுபடபோவதாக அறிவித்திருந்தது.

இதனால் போராட்டத்திற்கு செல்பவர்களை ஒடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை வீடுகளில் தூங்கி கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த 32 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பல நிர்வாகிகளை கைது செய்ய அவர்களது வீடுகளுக்கு போலீசார் சென்றதால் அவர்கள் வேறு இடங்களுக்கு சென்றனர்.
பணிக்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என்பதால் பல நிர்வாகிகள் அரசு அலுவலக பணிகளை புறக்கணித்தனர். கைது செய்தாலும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications