கஸ்பாவில் "கசமுசா".. மேடம் பேரு "ஐஸ்வர்யா".. மொத்தம் 5 பேராமே.. போலீசுக்கே தலைசுத்திடுச்சு.. கன்றாவி
5 பேரை திருமணம் செய்த பெண் குறித்து போலீசார் பல அதிர்ச்சி தகவல்களை கூறுகிறார்கள்
திருப்பத்தூர்: வடிவேலு படத்தில் வருவது போலவே, ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது.. 4 கல்யாணம் செய்த பெண் ஒருவர், 5வது கல்யாணம் செய்து கொள்ள ரெடியாகி கொண்டிருந்தார்.. கடைசியில் ஏடாகூடமாக சிக்கி கொண்டார்.. 5 பேரை சாய்த்த அந்த பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்துள்ள கஸ்பா என்ற ஊர்.. இந்த ஊரில் வசித்து வந்துள்ளார் ஐஸ்வர்யா.. இவரது பெற்றோர், குடும்பத்தினர் பற்றின தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
ஆனால், இவருக்கு திருமணமாகிவிட்டது.. முதன்முதலில் மூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. கரும்பூர் என்ற பகுதியை சேர்ந்தவராம் மூர்த்தி..

ஹைலைட்
ஆனால், இந்த திருமணத்தை ஐஸ்வர்யாவே செய்து கொண்டதாக தெரிகிறது.. இதற்கு அடுத்தபடியாக, கஸ்பா பகுதியில் பாபு என்பவரை திருமணம் செய்துள்ளார்.. ஆனால், பாபுவை விட்டு பிரிந்தார்.. அடுத்தபடியாக சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. அடுத்ததாக அசோகன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், இத்தனை பேரை திருமணம் செய்து கொண்ட விஷயம், ஒருவருக்கு ஒருவர் தெரியாமலும் அந்த பெண் கவனமாக பார்த்து கொண்டாராம்..

ஜாலி
இவர்கள் 5 பேருமே அதே பகுதியில் வசித்து வந்திருக்கிறார்கள்.. ஆனால், தனித்தனித்தனியாக திருமணம் செய்து கொண்டு, தனிகுடும்பம் நடத்தி வந்துள்ளார்.. திருமணம் முடிந்ததும் அவர்களுடன் ஜாலியாக இருப்பாராம் ஐஸ்வர்யா.. பிறகு ஒவ்வொருவரிடம் இருந்தும் குறைந்தது 10 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் வரை, பெற்றுக் கொண்டுள்ளார்.. 4 பேரையும் அப்படித்தான் ஏமாற்றி உள்ளார்.. அடுத்ததாக 5வது திருமணத்துக்கு ரெடியாகி உள்ளார்..

4 + 1
மாதனூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வலையை வீச, அந்த வலையில் மாதவனூர் மாப்பிள்ளையும் விழுந்துவிட்டார்.. திருமணத்துக்கு ஜரூர் வேலைகள் நடந்துகொண்டிருந்தது.. அப்போதுதான், 4 கணவர்களுக்கும் ஐஸ்வர்யாவின் 5வது திருமணம் பற்றி தனித்தனியாக தெரியவந்துள்ளது.. இதனால் 4 பேருமே அதிர்ந்துபோய், 4 பேருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்கள்.. ஐஸ்வர்யா மீது தனித்தனியாக புகாரையும் தந்துள்ளனர்..

ஹேப்பி ஐஸ்வர்யா
இந்த புகார்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. 4 பேரையுமே திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்று ஐஸ்வர்யா போலீசில் சொன்னாராம்.. எங்களிடமிருந்து பறித்த பணம் & நகையை ஐஸ்வர்யாவிடம் இருந்து பெற்று தாருங்கள் என்று 4 பேரும் போலீசில் கேட்டுக் கொண்டார்களாம்.. ஐஸ்வர்யாவும், அந்த பணம், நகையை 4 பேருக்கும் தருவதாக சம்மதம் சொல்லி , அடுத்த ஒரு சில மாதத்திற்குள் அவைகளை 4 கணவர்களிடமும் கொடுத்துள்ளார்..

5வது தியாகி
அதை பெற்றுக்கொண்ட 4 பேரும், ஐஸ்வர்யாவை திரும்பி கூட பார்க்காமல் சென்றுவிட்டார்கள்.. விவகாரம் இத்துடன் முடியவில்லை.. மாதனூர் மாப்பிள்ளையை 5வதாக திருமணம் செய்து கொண்டாராம் ஐஸ்வர்யா.. 35 வயதுதான் ஆகிறது ஐஸ்வர்யாவுக்கு.. அதற்குள் 5 திருமணம் நடந்துமுடிந்துவிட்டது.. மாதனூரில் இருந்து ஐஸ்வர்யாவுக்கு வாக்கப்பட்டுள்ளவர் பெயர் ராமமூர்த்தி.. 36 வயதாகிறதாம்.. 4 திருமணம் செய்தவர் என்று தெரிந்தும், ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார் என்றால் எப்பேர்பட்ட "தியாகி" அவர்???
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications