For Daily Alerts
Just In
போரூர் விபத்தில் பலியான 4 பேரின் அடையாளம் தெரியவில்லை
சென்னை: சென்னை போரூர் அருகே பல மாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.
இவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்துள்ள உறவினர்களிடம் இந்த உடல்கள் காட்டப்பட்டு அடையாளம் காண போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தபோது, அருகில் உள்ள 3 வீடுகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 42 வயது கணேஷ் என்பவர் இதில் இறந்துள்ளார்.
Comments
English summary
4 bodies yet to be identified in the Chennai building collapse incident.
Story first published: Sunday, June 29, 2014, 17:12 [IST]