கொரியர் வேன் மீது அரசு பஸ் மோதி விபத்து - 4 பேர் பரிதாப பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சுற்றுவட்ட சாலையில் சிந்தாமணி என்ற இடத்தில் திருப்பூரில் இருந்து சிவகாசிக்கு சென்ற அரசு பேருந்தும், கொரியர் கொண்டு சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநரும், வேன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications