For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபத்தில் 5 வயது குழந்தை பலி.. லாரிக்கு தீ வைப்பு.. சாலை மறியல்.. சென்னையில் பரபரப்பு

சென்னையில் விபத்து ஏற்படுத்திய லாரியை பொது மக்கள் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வியாசர்பாடி வேகமாக வந்த லாரி மோதியதில் 4 வயது குழந்தை பலியாகினார். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் ஜெயக்குமார் பெயிண்டராக உள்ளார். இவர் நேற்று இரவு தனது 5 வயது மகள் பிரியதர்ஷியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வியாசர்பாடி நரசிம்மபுரம் அருகே சென்றுகொண்டிருந்த போது, ஆந்திராவில் இருந்து கட்டுமான பொருட்கள் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஒன்று ஜெயக்குமாரின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

5 years old girl dies Viyasarbody in Chennai

இதில் ஜெயக்குமாரும், அவரது குழந்தை பிரியதர்ஷினியும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது குழந்தை பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே பலியாகியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டியவந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் லாரியை தீ வைத்து கொளுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி வழியாக 3 லாரிகள் மீது கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
five years old girl dies Viyasarbody in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X