பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் அன்பழகன்
பொறியியல் கலந்தாய்வுக்காக 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சேலம்: பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்காக அண்ணா பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது.

சேலத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய அமைச்சர், மாணவர்களின் அலைச்சலை தடுக்கும் வகையில் ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆன்லைனில் தங்கள் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த அமைச்சர் அன்பழகன் பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு செல்ல அவசியம் இல்லை எனவும் கூறினார்












Click it and Unblock the Notifications