கிருஷ்ணகிரி வங்கியில் 5,000 பவுன் நகைகள் கொள்ளை!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 5,000 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குள் இன்று அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள், லாக்கரை உடைத்து சுமார் 5,000 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டன. தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வங்கிக்குப் பின் புறத்தில் உள்ள கம்பி வேலியை அறுத்து கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். மர்ம நபர்கள் இரண்டு பேர் வங்கிக்குள் நுழையும் காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த இரண்டு நபர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications