திருநெல்வேலி அருகே இரவு நேரங்களில் ஆடுகளைத் திருடிய கும்பல் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் இரவு நேரங்களில் கார் மற்றும் பைக்கில் வந்து ஆடுகளைத் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் உள்ள களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம கும்பல் திருடிச் சென்றது. இதுதொடர்பாக களக்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், களக்காடு பகுதியில் ஆடுகள் திருடிய கீழதேவநல்லூரை சேர்ந்த கந்தையா, அவரது தம்பி கொம்பையா , பத்தமடையை சேர்ந்த சின்னத்துரை, மகாராஜன், வடக்கு கள்ளிக்குளத்தை சேர்ந்த சங்கர் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆடுகள் கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து களக்காடு மற்றும் மூன்றடைப்பு பகுதிகளில் திருடிய 17 ஆடுகள் மீட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications