நாமக்கல்: மணல் லாரி, கார் மோதலில் 5 ஐயப்ப பக்தர்கள் பலி
நாமக்கல்: நாமக்கல் அருகே மணல் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள்.
நாமக்கல்லிலிருந்து பரமத்திவேலூர் நோக்கி மணல் லாரி சென்று கொண்டிருந்தது. காவேட்டிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது மணல் லாரி மோதி விபத்துள்ளானது. இதில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் ஈடுபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் கார் டிரைவர் ராமதிலகம், ரவி, இவரது மகன் விக்னேஸ்வரன (19), மற்றொரு மகன் கார்த்தி(13), நவீன்குமார் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த
விக்னேஸ்வரராஜா, விஜயகுமார், சரவணன் ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரும் சபரிமலை சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.; விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications