செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5 ஆயிரம் கண அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கண அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழையில் தீவிரம் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 நாளாக மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்துவரும் கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் மழைநீர் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்து நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications