For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50 நாய்கள் எரிப்பு: அஸ்வத் மட்டுமே குரல் கொடுக்கிறார்- அண்ணே விஷால் எங்கப்பா?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே 50 தெரு நாய்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில், மேல்மருவத்தூர் அருகேயுள்ள கீழமூர் என்ற கிராமத்தில், ஜூன் 5ம் தேதி சுமார் 50 தெரு நாய்கள் எரித்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் என்பவருக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரகசிய தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அஸ்வத் அந்த ஊருக்கு நேரில் சென்று எரிந்த நிலையில் கிடந்த நாய்களின் உடலை வீடியோ எடுத்ததுடன் இது குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

நாய்களை கொலை செய்ய யாருக்கும் உரிமை இல்லை என கொந்தளிக்கிறார் அஸ்வத். கேரள மாநிலத்தில் நாய்கள் இனவிருத்தி செய்வதை தடுக்க ஆபரேஷன் செய்த போது நடிகர் விஷால் அதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார்.

தற்போது அவர் வசிக்கும் சென்னை அருகே 50 நாய்கள் எரித்துக் கொல்லப்பட்டும் இதுவரை அவர் எதுவும் செய்யவில்லை.

English summary
Activist Aswath is not able to digest the fact that 50 dogs are burnt alive near Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X