ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அதிரடி இடமாற்றம்...
சென்னை : தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 50 பேரை தமிழக அரசு அதிரடி இடமாற்றம் செய்துள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிட அமைப்பு என 2 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 18 செயற்பொறியாளர்களுக்கு, கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு காரணமாக செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாகின. இதனை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த 35 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவர்களுக்கான பணி இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த 50 செயற்பொறியாளர்கள், வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 18 பேர் கண்காணிப்பு பொறியாளராகவும், 35 பேர் செயற்பொறியாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மேலும் தங்களை பாதிக்காத வகையில் இடமாற்றம் வழங்கியதற்கு முதல்-அமைச்சருக்கும், துறை அமைச்சருக்கும் பொறியாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications