மீனவர்களுக்கு 5000 தனி வீடுகள் கட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு
மீனவர்களுக்கென தனி வீட்டு வசதித் திட்டத்தில் 5000 வீடுகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீனவர்களுக்கு என தனி வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 5000 தனி வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற சசிகலா தரப்பு எம்எல்ஏவான எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் இன்று பொறுப்பேற்ற அவர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திதிட்டார்.

பின்னர் தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும் என்றார். மேலும் 1, 70000 செலவில் மீனவர்களுக்கு என 5000 வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications