மூச்சுமுட்டிய பொதுக்கூட்டம்.. தென்காசியில் எடப்பாடியின் பரப்புரையில் நெரிசலில் சிக்கி முதியவர் பலி
தென்காசி: தென்காசி அருகே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதியவர் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒருபகுதியாக தென்காசி தொகுதி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரசாரம் செய்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறது. நீட் தேர்வு ரத்து, அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எனக்கூறி ஏமாற்றி உள்ளது. கடந்த 3 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு திமுக கொண்டு செல்லவில்லை என விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் தான் அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பங்கேற்ற முதியவர் ஒருவர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 60 வயது நிரம்பிய வள்ளிநாயகம் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் கூட்டத்தில் சிக்கி பலியாகி உள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications