For Daily Alerts
Just In
திட்டக்குடி அருகே மரத்தின் மீது கார் மோதி பயங்கர விபத்து- 7 பேர் பலி
திட்டக்குடி அருகே புளியமரத்தின் மீது கார் மோதி நிகழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.
கடலூர்: திட்டக்குடி அருகே கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகினர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் குடும்பத்தினருடன் கேரளாவில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார். திருமணம் நடைபெறும் பத்தனம்திட்டாவுக்கு வாடகை காரில் பிரகாஷ் குடும்பத்தினர் சென்றனர்.
இவர்கள் சென்ற கார் திட்டக்குடி அருகே எழுதூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது புளியமரம் ஒன்றின் மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் பிரகாஷ், அவரது மனைவி உட்பட 7பேர் சம்பவ இடத்தில் பலியானர்கள். பிரீத்தி என்பவர் மட்டும் பெரம்பலூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Comments
English summary
Seven Presons Killed in Thittakudi Accident.
Story first published: Thursday, October 19, 2017, 7:45 [IST]