இரவோடு இரவாக பரபரப்பு.. தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை.. நடுக்கடலில் திக்திக்
மயிலாடுதுறை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி மீனவர்களைக் கைது செய்யும் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அப்படித் தான் மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மேலும், அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி, இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இடையில் இந்த அத்துமீறல்கள் சில காலம் நின்றிருந்த நிலையில், மீண்டும் கடந்த சில நாட்களாகவே இந்தப் போக்கு ஆரம்பித்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படை அவர்களைத் தேவையே இல்லாமல் பல மாதங்கள் சிறையில் தள்ளுகிறது. அவர்கள் ரிலீஸ் செய்யப்பட்டாலும் கூட அவர்கள் படகுகளை இலங்கை நாட்டுடைமை ஆக்கிவிடுகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது தமிழக அரசில் இருந்து மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மத்திய அரசு நேரடியாக இதில் தலையிட்டு இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி மீன்பிடித்தாக சொல்லி 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த மீனவர்கள் அனைவரும் மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் ஆகும். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்திருக்கிறது.
கைது செய்தது மட்டுமின்றி, 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வேலூர், ராணிப்பேட்டைக்கு ஹை அலர்ட்! உஷாரா இருங்க மக்களே! வானிலை மையம் வார்னிங் -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்!












Click it and Unblock the Notifications