தஞ்சாவூர்: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- வேன் டிரைவர் தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை வேன் டிரைவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூரில் கீழ்காட்டூர் கிராமத்தில் 3ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது தனியார் பால் நிறுவன வேன் ஓட்டுனர் ஆனந்த் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆனந்தை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications