ஆர்.கே.நகரில் ரூ.80 கோடி கள்ளப் பணம் பாய்ந்துள்ளது.. ஐடி சோதனையில் திடுக்கிடும் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று முதல் நடந்து வரும் வருமான வரித்துறை ரெய்டில் கிடைத்த தகவல்களின்படி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.80 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் செலவிடப்பட்டுள்ளதாம்.

நேற்று முதலே சுமார் 35 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில்தான் இச் சோதனை நடைபெறுகிறது.

80 crore pumped in to bribe voters in R K Nagar, IT raids reveal

அதிலும், அமைச்சர் விஜயபாஸ்கர்தான் ஐடி ரெய்டு பிடியில் வசமாக சிக்கியுள்ளார். ஆளும் கட்சியின் கூட்டணி கட்சி தலைவரான சரத்குமார் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்தது.

இந்த ரெய்டுகளின்போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் பார்த்தால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு ரூ.80 கோடி பணம் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாக்காளர்களுக்கு லஞ்சமாக இப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை தொடர்ந்து ஆர்.கே.நகரில் தேர்தல் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+